அண்மைய செய்திகள்

recent
-

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெருந்திரளான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர்!

பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்தப் பெருந்துயர் சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பசறை பகுதி மக்கள் கண்ணீர் மல்க, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர். குறித்த பேருந்து விபத்தில், லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (வயது-31) மற்றும் அந்தோனி நோவா (வயது-32) ஆகியோரும் உயிரிழந்தனர்.

 இவர்கள், உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும் என்பதற்காக, சம்பவ தினத்தன்று குறித்த பேருந்தில் ஏறத் தவறிய நிலையில், முச்சக்கர வண்டியொன்றில் துரத்திப் பிடித்து பேருந்தில் ஏறியுள்ளனர். இந்நிலையில், பேருந்து நிற்காமல் சென்றிருந்தால் இவர்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளன்றே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெருந்திரளான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர்! Reviewed by Author on March 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.