மன்னார் மாவட்டத்தில் 'செளபாக்கியா' தேசிய வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.
மன்னார் மாவட்டத்தில் எருக்கலம் பிட்டி கிழக்கு மற்றும் தலை மன்னார் கிராமத்தில் மேற்படி நிகழ்சி திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் பிரதேசச் செயலாளர் ம.பிரதீப் தலைமையில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்ட பணிப்பாளர்,பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கிரம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தற்காலிக நியமன கடிதங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்னார் மாவட்டத்தில் 'செளபாக்கியா' தேசிய வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
March 06, 2021
Rating:

No comments:
Post a Comment