அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் பரந்தன் சந்தியை அண்மித்த விவசாய விதைப் பண்ணைக்கு முன்பாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 இந்த விபத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான வடமராட்சியை சேர்ந்த மேரிஜாக்சன் அன்ரனி (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Author on March 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.