அண்மைய செய்திகள்

recent
-

வனப்பகுதிக்குள் காணாமல் போன இளைஞனை தேடும் பணி

தனது வீட்டுத்தோட்டத்திற்கு வரிசு தேடி போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போன இளைஞனை தோட்ட மக்கள் ஐந்தாவது நாளாகவும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தபோதும் இதுவரையில் இளைஞனை காணவில்லை என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் வரிசு வெட்டுவதற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் ஐந்தாவது நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இந் நிலையில் கடந்த 11 ஆம் திகதி பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்ட போதும் அது பலனலிக்கவில்லை.

 சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் குயினா மேல்பிரிவு அதே அயல் தோட்ட மக்கள் தொழிலுக்கும் செல்லாது தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போன இளைஞனுக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் இருப்பதாக தெரிவித்த அவரது தாயார் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார்.

வனப்பகுதிக்குள் காணாமல் போன இளைஞனை தேடும் பணி Reviewed by Author on March 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.