அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றினால் ஒருவரின் உயிரிழப்பு பதிவு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹோமாகம தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர், கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார். 

 இவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 526ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 87 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 84 ஆயிரத்து 253 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதன்படி, இன்னும் இரண்டாயிரத்து 687 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் ஒருவரின் உயிரிழப்பு பதிவு! Reviewed by Author on March 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.