கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!
இந்நிலையில், நீண்ட காலத்தின் பின்னர், முதலாவது மனைவி கணவர் வீட்டுக்கு மீண்டும் சென்றநிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், குறித்த குடும்பத்தில் மனைவிமார்களுக்கு இடையில் மிக நீண்ட நாட்களாக சண்டை, சச்சரவு இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையை அடுத்து, முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!
Reviewed by Author
on
March 19, 2021
Rating:

No comments:
Post a Comment