இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்
இந்திய அரசும் ஆதரவுத் தெரிவிக்க உறுதி கூறியுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் அறிவித்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முடிந்த பிறகு, ஐ.நா. மனித உரிமைக் குழு நிறைவேற்றிய பல தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இந்த நிலையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கூடவிருக்கும் ஐ.நா.மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இணைந்து கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளிலிருந்து அவர்களைக் காக்க முன்வரும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment