அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 46 கிலோ கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

 மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

 கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா பொதிகள் மீட்பு. Reviewed by Author on March 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.