கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர் பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன இணைந்து இன்றைய தினம் (20) ஆரம்பித்திருந்தன.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் .
கடற்றொழில் துறையில் இலங்கையும் நேர்வேயும் நீண்டகால பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதுடன் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன.
அதுமட்டுமல்லாது அதிகளவு கடல் வளங்களைக் கொண்ட தீவாக இலங்கை காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.
அதனபடிப்படையில் இத்தகைய ஆய்வுகள் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பிரயோகித்து அந்தத் துறையை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சவால்கள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக நோர்வே அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிததுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர் பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Reviewed by Author
on
April 20, 2021
Rating:

No comments:
Post a Comment