கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கை பெண் என அடையாளம்கொலையில் தொடர்புடையவர் கைது.
ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.
கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரைவிசாரணையாளர்கள் கைது செய்ததை அடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங் களின் பின்னர் அடையாளம் காணப்பட் டுள்ளது என்று பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதி யில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணாமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.
பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரது தொலை பேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன. தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பாரிஸ் Versailles குற்றத் தடுப்புப் பிரிவினர் இக் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்தனர்.
கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கை பெண் என அடையாளம்கொலையில் தொடர்புடையவர் கைது.
Reviewed by Author
on
April 28, 2021
Rating:
Reviewed by Author
on
April 28, 2021
Rating:


No comments:
Post a Comment