அண்மைய செய்திகள்

recent
-

4 ஆண்கள் உட்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இதற்கமைய, மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும், கொட்டமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாரஹேன்பிட பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் 98,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,884 ஆகும்.

4 ஆண்கள் உட்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி! Reviewed by Author on April 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.