அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்று (07) பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த வாரம் 86 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இலங்கையில் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளதையும் கொவிட் தொற்றின் தீவிர தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் நேற்றைய தினம் 19 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தன.

 குறித்த 19 பேரும் 12 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும். உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் சுனன்தபுர, இலவாளை, கோன்கஹவெல, ரத்மலானை, தெஹியத்தகண்டிய, பதுளை, மயிலகஸ்தென்ன, வாத்துவை, கொள்ளுபிட்டி, ரத்தொலுவை, ராகமை, போத்தல,அலபலாதெணிய, அங்குலுகஹ, ஹிக்கடுவை, நுவரெலியா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்! Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.