உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.
குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக மாதம் ஒன்றிற்கு 2500 ரூபாய் பணம் குறித்த மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வு ஒரே நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சுகாதார நடை முறைகளை கருத்தில் கொண்டு இடம் பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரி பிரீன்ஸ் டயஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வை தொடர்ந்து மர நடுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
May 08, 2021
Rating:

No comments:
Post a Comment