பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திரகுமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முகக்கவசத்தினை முறையாக அணியாத பலருக்கு இதன்போது பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்
Reviewed by Author
on
May 09, 2021
Rating:

No comments:
Post a Comment