அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 390 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 390 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இந்த வருடம் ஜனவரி தொடக்கம் தற்போது வரை 373 கொரோனா தொற்றாளர்களும், மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 31 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாதம் 1288 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.




மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. Reviewed by Author on May 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.