வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவிப்பு
மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவுமெனவும் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் வரையிலான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காங்கேசன்துறை ஊடான கடற்பிராந்தியத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவிப்பு
Reviewed by Author
on
May 19, 2021
Rating:
Reviewed by Author
on
May 19, 2021
Rating:


No comments:
Post a Comment