சீரற்ற வானிலையால் 2,750 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற வானிலையால் களுத்துறை, குருநாகல், மற்றும் காலி மாவட்டங்களிலும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் தேசிய இணைப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சீரற்ற மழையினால் மக்கள் இடம்பெயர நேரிடுமாயின் அந்த மக்களின் சுகாதார நலன் கருதி, சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறினார்.
சீரற்ற வானிலையால் 2,750 குடும்பங்கள் பாதிப்பு
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment