தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அப்புறப்படுத்த முடியும் என அறிவிப்பு
கப்பலில் தீப்பற்றியதன் பின்னர் நாட்டின் பல்வேறு கரையோரங்களில் இறந்த நிலையில் கடலாமைகள், திமிங்கிலங்கள், டொல்பின்கள் கரையொதுங்கின.
மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் இரண்டு கடலாமைகள் இன்று கரையொதுங்கியிருந்தன.
இதில் ஒரு கடலாமை சுமார் 60 கிலோகிராம் எடையை கொண்டிருந்ததுடன், மற்றுமொரு கடலாமை காயங்களுடன் காணப்பட்டது.
முந்தல் – சின்னப்பாடு, பாரிபாடு, புதுப்பாடு கரையோரங்களில் இதுவரை ஆறு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன.
புத்தளம் – தழுவ பகுதியிலும் நேற்று (16) மாலை கடலாமையொன்று கரையொதுங்கியது.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்டை பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் 5 அடி நீளமான டொல்பின் ஒன்று இறந்த நிலையில் இன்று மாலை கரையொதுங்கியது.
வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் டொல்பின் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அப்புறப்படுத்த முடியும் என அறிவிப்பு
Reviewed by Author
on
June 18, 2021
Rating:
Reviewed by Author
on
June 18, 2021
Rating:


No comments:
Post a Comment