கரையொதுங்கிய கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் மீட்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏர்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக மருத்துவ பீடத்துக்கும் அத்திட்டிய மிருக மருத்துவ பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இதுவரை கடலாமைகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என கண்டறியப்படவில்லை.
இதேவேளை, கிளிநொச்சி வலைப்பாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆமை ஒன்று நேற்று கரையொதுங்கியிருந்தது. அந்த ஆமையின் உடலை கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் கடலாமைகளின் உடற் பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பயவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர்ச்சியாக பல கடலாமைளின் உடற் பகுதிகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவற்றை பகுப்பாய்வு செய்ய சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்
.
.
கரையொதுங்கிய கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் மீட்பு
Reviewed by Author
on
June 14, 2021
Rating:

No comments:
Post a Comment