அண்மைய செய்திகள்

recent
-

பட்டத்தின் நூலில் சிக்கி உயிரிழந்த தாயும் குழந்தையும்

ரத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூஸ்ஸ, பிடிவெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் அவருடைய ஒன்றரை வயது குழந்தையும் உயிரிழந்துள்ளனர். நேற்று (17) இரவு 8 மணியளவில் காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காற்றில் பறந்து கொண்டிருந்த பட்டம் ஒன்றின் நூலில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளது. சம்பவத்தில் 35 வயதுடைய தாயும் அவருடைய ஒன்றரை வயது மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டத்தின் நூலில் சிக்கி உயிரிழந்த தாயும் குழந்தையும் Reviewed by Author on July 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.