டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த யுவதி காணாமல் போயுள்ளார்
லிந்துலை, சென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
டெவோன் நீர்வீழ்ச்சிப் பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதால் அப்பகுதியில் நுழைய தடை விதித்து அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கையில் பத்தனை பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த யுவதி காணாமல் போயுள்ளார்
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment