அண்மைய செய்திகள்

recent
-

டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

சிறுமியை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் குறித்த வீட்டில் வேலை செய்த 21 மற்றும் 32 வயதுடைய யுவதிகள் இருவரிடம் முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த 21 ஆம் திகதி டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை Reviewed by Author on July 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.