அண்மைய செய்திகள்

recent
-

அடுத்துவரும் சில நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

அடுத்துவரும் சில நாட்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். 

 வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கடந்த சில நாட்களாக மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், பெருமளவான மாதிரிகளை பரிசோதனைக்க உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் சில நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை! Reviewed by Author on July 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.