அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய 3 புதிய இடங்கள்; அதிகரித்து வரும் கொவிட் இறப்புகளை அடுத்து தீர்மானம்

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறையில் மேலும் மூன்று மயானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி கல்லறையில் கொவிட் சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தைச் சேர்த்து விரிவுபடுத்தப்பட்டது. 

 மூன்று புதிய மயானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிரதேசங்கள் குறித்து அறிவதற்காக தொழில்நுட்பக் குழு ஆய்வு நடத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை 2264 கொவிட் சடலங்கள் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவாடி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளன.அங்கு புதைக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்(2070) ஆவர். மேலும், ஓட்டமாவடி மயானத்தில் 98 இந்துக்கள், 55 பௌத்தர்கள் மற்றும் 41 கத்தோலிக்கர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய 3 புதிய இடங்கள்; அதிகரித்து வரும் கொவிட் இறப்புகளை அடுத்து தீர்மானம் Reviewed by Author on August 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.