அண்மைய செய்திகள்

recent
-

87% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - கல்வியமைச்சர்

நாட்டிலுள்ள ஆசிரியர்களுள் 87% தடுப்பூசியின் முதல் டோஸ் மிக விரைவாக பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஏறத்தாழ 253,000 ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலுள்ள 98% ஆன ஆசிரியர்கள் மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள 87% ஆன ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும் .அதனை தொடர்ந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியவுடன், சமூக இடைவெளி விதிகளுக்கு அமைய பாடசாலைகள் மீள திறக்கப்படும். சுகாதார நிபுணர்களிடையே பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

87% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - கல்வியமைச்சர் Reviewed by Author on August 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.