அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆத்திமோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்ப்படுத்தி வழங்குமாறு பொது மக்கள் கோரிக்கை

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் கடந்த 2010-2011 ஆண்டு காலப்பகுதியில் மக்களின் சுகாதார தேவையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இடம் பெயர்வு காரணமாக சனத்தொகை குறைவடைந்தமையாலும்,காட்டு விலங்கு பிரச்சினையாளும்,ஒழுங்கான போக்குவரத்து வசதி இன்மையாலும் பராமரிப்பு அற்ற நிலையில் பாழடைந்து காணப்படுகின்றது இருப்பினும் மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டு குறித்த சுகாதார நிலையத்தை மீள் செயற்படுத்தி மக்கள் பாவனைக்கு வழங்குமாறு ஆத்திமோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

 குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஊடாக ஆத்திமோட்டை ,கள்ளியடி ,கோவில்குளம் ,கூராய் போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடந்து வந்த நிலையில் பல வருடங்களாக குறித்த சுகாதார நிலையம் பராமரிப்பு இன்றி பற்றைகள் புதர்கள் வளர்ந்த நிலையில் பாழடைந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் 

 தங்கள் கிராமத்தில் அவசர சிகிச்சைக்கோ அல்லது விசக்கடி ஏற்படும் பட்சத்திலோ தற்போது தாங்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து பல கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் விடத்தல் தீவு வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இல்லா விட்டால் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே மக்களின் சுகாதார தேவையை கருத்தில் கொண்டு பயன்பாடு இன்றி காணப்படும் குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்படுத்தி வைத்தியர்கள் மருத்துவ ஊழியர்களை நியமித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
                 


மன்னார் ஆத்திமோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்ப்படுத்தி வழங்குமாறு பொது மக்கள் கோரிக்கை Reviewed by Author on August 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.