யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால், குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதனால் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மூன்று தடவைக்கு மேல் வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்களை பெற்று வருகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு
Reviewed by Author
on
August 04, 2021
Rating:
Reviewed by Author
on
August 04, 2021
Rating:


No comments:
Post a Comment