200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டம்
கொவிட் செயலணியுடன் இணைந்து செயற்படும் இந்த குழுவின் பரிந்துரைகள் 17 ம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கிராமப்பகுதிகளில் உள்ள 200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்;கும் 3000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்குமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசினால் மூடப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்;கு முன்னோடி நடவடிக்கையாக சிறிய பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்போது உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்தபடி 12 முதல் 18 வயதுடைய மாணவர்களிற்கு பைசர் தடுப்பூசியை வழங்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டம்
Reviewed by Author
on
September 13, 2021
Rating:

No comments:
Post a Comment