அண்மைய செய்திகள்

recent
-

200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டம்

200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம் கல்வியமைச்சு கற்றல் நடவடிக்கைகளிற்காக மீண்டும் ஆரம்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்;கும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராயுமாறு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

கொவிட் செயலணியுடன் இணைந்து செயற்படும் இந்த குழுவின் பரிந்துரைகள் 17 ம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கிராமப்பகுதிகளில் உள்ள 200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்;கும் 3000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்குமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொரோனா வைரசினால் மூடப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்;கு முன்னோடி நடவடிக்கையாக சிறிய பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்போது உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்தபடி 12 முதல் 18 வயதுடைய மாணவர்களிற்கு பைசர் தடுப்பூசியை வழங்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

200க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டம் Reviewed by Author on September 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.