யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு
மேலும், இதன்போது குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அந்த கர்ப்பிணிப்பெண், ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்.
அதன்பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
குறித்த இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
இந்நிலையில் சடலம் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 11, 2021
Rating:

No comments:
Post a Comment