அண்மைய செய்திகள்

recent
-

நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து இல்லை

நாளை நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான பேருந்து புகையிரத சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுக தெரிவித்துள்ளார். நிதியமைச்சருடனான விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்தெரிவித்துள்ளார். 

மாகாணங்களிற்குள் பேருந்துசேவை மாத்திரம் இடம்பெறும் புகையிரதசேவை இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். புகையிரதங்களில் போதிய ஆசனவசதிகள் இல்லாததன் காரணமாகவும் அனேகமானவர்கள் நின்றுகொண்டே பயணம் செய்வதாலும் புகையிரதசேவையை ஆரம்பிக்கவேண்டாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதிகளவு பயணிகளை ஏற்றுவதை அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்துகளில் பயணிகளில் நின்றுகொண்டு பயணம் செய்வது அவதானிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து இல்லை Reviewed by Author on September 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.