நிகழ்நிலை பட்டமளிப்பு நிகழ்வை நிராகரிக்கின்றோம். யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்.
எனினும் அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.எனினும் இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில்
விருப்பமின்மை காணப்படுகின்றது.
இதுதொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.
நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம்
தெரிவித்துள்ளனர். எனவே பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது
நிகழ்நிலை பட்டமளிப்பு நிகழ்வை நிராகரிக்கின்றோம். யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்.
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment