எம்பிலிப்பிட்டியவில் மனைவி சுட்டுக்கொலை; கணவன் கைது
எம்பிலிப்பிட்டிய கரடமந்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பலியானவர் 35 வயதுள்ள எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினா்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்பிலிப்பிட்டியவில் மனைவி சுட்டுக்கொலை; கணவன் கைது
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment