நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மேலும் நீடிக்காமல் இருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் தற்போது நடைபெறும் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை எந்த சிக்கலும் பதிவாகவில்லை என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை நீக்குவதன் மூலம் நாட்டை மீண்டும் திறக்க சுகாதார பரிந்துரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க கொரோனா தடுப்பு செயலணி முடிவு செய்துள்ளது.
நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment