அண்மைய செய்திகள்

recent
-

நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி

நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முதற்தடவையாக இன்று (24) ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, குருநாகல், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆகிய இடங்களில் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. 

 கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளை காலை 9 மணி முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னதாக குறித்த சிறுவர்களை விசேட வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதிக்கவுள்ளதாக, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார். இந்த சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதுடன், முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வாரங்களின் பின்னர் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.

நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி Reviewed by Author on September 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.