அண்மைய செய்திகள்

recent
-

பால்மாவின் விலை தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை!

பால்மாவின் விலை தொடர்பில் வாழ்க்கை செலவு குழு நாளை கூடவுள்ளது. பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.மேற்படி கலந்துரையாடலானது நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியான வீழ்ச்சி போன்ற காரணிகளின் அடிப்படையில் உள்ளூர் பால்மா இறக்குமதியாளர்கள் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

 பால்மா இறக்குமதியில் நிலவும் சிக்கல்நிலை காரணமாக , சந்தையில் பால்மாவிற்கு தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலவுகிறது.பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம்பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்னவைத்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பால்மாவின் விலை தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை! Reviewed by Author on September 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.