அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கை கெல்விற்றஸ் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கெல்விற்றஸ் நிறுவனத்தின் அணுசரணையில் தொடர்பாடலுக்கான நிலையம்(CCT) ஒத்துழைப்புடன் ஒரு தொகுதி நிவரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது 

 நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அத்தியாவடிய பொருட்களான மா,சீனி,பருப்பு,தேயிலை,வெங்காயம், உட்பட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளன நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கு 175 குடும்பங்களுக்கு மேற்படி 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது








மன்னாரில் இலங்கை கெல்விற்றஸ் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on September 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.