அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பியது

நாட்டில் கடந்த 41 நாட்கள் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (1) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவைகளும் இயல்பு நிலையில் காணப்படுகின்றது. 

 மன்னார் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் மக்கள் வெளி நடமாட்டங்களை அதிகம் தவிர்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் வழமை போல் இடம் பெறுவதுடன் சுகாதார நடை முறைகளும் இறுக்கமாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                






மன்னார் மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பியது Reviewed by Author on October 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.