அண்மைய செய்திகள்

recent
-

வல்லையில் கொள்ளைக் கும்பல் ; ஒரு மணி நேரத்தில் மூவரிடம் கொள்ளை!

வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் காரில் வந்த மூவர் கொண்ட குமபல் ஒன்று மூவரை அச்சுறுத்தி பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை அடுத்து இந்தக் கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனா். வெள்ளை நிறக் கார் ஒன்றினில் பயணித்த மூவர் கொண்ட இக்கும்பல் வல்லைப்பகுதியில் வீதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பான அட்டையைக் கோரியுள்ளனர்.

 இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடமிருந்த பணத்தைப் பறித்து தப்பித்துள்ளது. அதே போன்று உழவு இயந்திரத்தில் கல் ஏற்றி வந்திருந்த ஒருவரை வல்வெட்டித்துறையில் வழி மறித்து பெர்மிட் கோரிய கும்பல் அவரிடமிருந்தும் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளது. ஒரே நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த துணிகர பணப்பறிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். குறித்த காரிலிருந்த ஒருவர் அங்வீனமுற்றவர்களின் பயன்பாட்டிலுள்ள கைத்தடியை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

வல்லையில் கொள்ளைக் கும்பல் ; ஒரு மணி நேரத்தில் மூவரிடம் கொள்ளை! Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.