அண்மைய செய்திகள்

recent
-

48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் சுகாதார தொழிற்சங்கங்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 16 தொழிற்சங்கங்கள் இன்று (24), 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன. தாதியர், நிறைவுகாண் உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கள் இணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றன. பதவி உயர்வுகள் வழங்கப்படாமை, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 நாடு முழுவதுமுள்ள 1,103 வைத்தியசாலைகளிலும் 365 சுகாதார வைத்திய பிரிவுகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். பணிப்பகிஷ்கரிப்பு காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் மஹரகம அபெக்‌ஷா வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என சுகாதார தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்

.
48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் சுகாதார தொழிற்சங்கங்கள் Reviewed by Author on November 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.