உரம் இல்லை; மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
தற்போது ஹட்டனில்
ஒரு கிலோ கரட் 200-220 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கத்தரிக்காய் 240 - 260 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தக்காளி 300 - 320 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கறிமிளகாய் 440 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பாகற்காய் 400 - 420 ரூபாவாகவும்,
ஒரு கிலோ போஞ்சி 300 - 320 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முட்டை கோவா 160-180 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பீட்ரூட் 180 - 200 ரூபாவாகவும்
ஒரு கிலோ லீக்ஸ் 240-260 ரூபாவாகவும்,
ஒரு கிலோ நூக்கல் 200 - 220 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பயற்றங்காய் 220 -240 ரூபாவாகவும்
ஒரு கிலோ புடலங்காய் 240 -260 ரூபாவாகவும்
ஒரு கிலோ பூசணிக்காய் 120-130 ரூபாவாகவும்,
ஒரு கிலோ குடைமிளகாய் 350-400 ரூபாவாகவும்,
ஒரு கிலோ எலுமிச்சை 750 முதல் 800 ரூபாவாகவும் உள்ளன.
மரக்கறி விலை அதிகரிப்பினால் கடும் சிரமங்களை எதிர் நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையால் மரக்கறி பயிர்கள் அழிந்து வருவதனால் மரக்கறிகள் சந்தைக்குச் சரியாக வருவதில்லை என்றும் இதனால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளன என்றும் நகர மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி விலை அதிகரிப்பினால் தமது மரக்கறி வியாபாரம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமைகளினால் தாம் கடும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக் கின்றனர்.
உரம் இல்லை; மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment