அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வயோதிப பெண் மரணம்

மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(9) மாலை கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) மாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். 

குறித்த வயோதிப பெண் கொரோனா தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 9 தினங்களில் மாவட்டத்தில் 160 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வரை 2553 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வயோதிப பெண் மரணம் Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.