அண்மைய செய்திகள்

recent
-

பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது Reviewed by Author on November 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.