மின் கம்பிகள் அறுந்து இருந்தால் உடனடியாக அறிவிக்கவும்
(1) முதலில் மின் கம்பிகள் அறுந்த இடத்திற்கான மின் வழங்கலை உடனடியாவும் பூரணமாகவும் துண்டித்து, மக்களை மின் விபத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யும்.
(2) மின்சாரம் இல்லாத இடத்திற்க்கு மின் வழங்க முயல்வதிலும் பார்க்க, மின் வடங்கள் அறுந்த இடங்களுக்கு சென்று துண்டித்தலை மேற்கொள்வதையே செய்யும்.
(3) இதன் பிற்பாடு அதிக மின்மாற்றிகளை (அதிக நுகர்வோரை) உடைய உயர் மின் அழுத்த மார்கங்களில் எற்ப்பட்ட துண்டிப்புக்களை நிவர்த்தி செய்வதன் மூலம் மின் துண்டிக்கப்பட்ட அதிகளவானோருக்கு மின் வழங்கலை உறுதி செய்யும்.(உரிய பாதுகாப்புகளை உறுதி செய்த பின்னர், மின் வழங்கல் மேற்கொள்ளப்படும்)
(4) அவ்வாறு அனைத்து உயர் மின் அழுத்த மின் மார்க்கங்களும் சரி செய்யப்பட்டதன் பிற்பாடு, பிழையுள்ள அதிகூடிய வாடிக்கையாளர்களை கொண்ட மின்மாற்றிகள் ஒவ்வொன்றாக சீர் செய்யப்படும்.
(5) இதன் பிற்பாடு, இவ்வாறே அதிகூடிய வாடிக்கையாளர்களை கொண்ட தாழ் மின் அழுத்த மார்கங்கள் சீர் செய்யப்படும்.
(6) இதன் பிற்பாடே தனிப்பட்ட வீடுகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை சீர் செய்ய விளையும்.
எனவே ஏதாவது இடத்தில் மின் கம்பிகள் அறுந்து இருந்தால் உடனடியாக (021) 202 4444
இலக்கத்துக்கு அல்லது கீழ் உள்ள இணைப்பில் உள்ள இலக்கங்களுக்கு அறிவிப்பதுடன், மின் கம்பிகளுக்கு அருகாகவேனும் ஒருவரையும் செல்ல விடாது தடுத்தல் மிக்க நன்று.
மின் கம்பிகள் அறுந்து இருந்தால் உடனடியாக அறிவிக்கவும்
Reviewed by Author
on
November 13, 2021
Rating:
No comments:
Post a Comment