அதிபர்கள், ஆசியர்களின் சம்பளத்தை அதிகரிப்பு?
இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற ரூபா 109,000 மில்லியனுக்கு அதிக தொகையினை விட மேலதிக ஒதுக்கீடாகும்.
தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 53,000 இற்கு அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ரூபா 27,600 மில்லியன் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த முழுத் தொகையினையும் இவ் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 20,000 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 7,600 மில்லியன் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசியர்களின் சம்பளத்தை அதிகரிப்பு?
Reviewed by Author
on
November 13, 2021
Rating:
No comments:
Post a Comment