அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் தற்போது கணிசமாக உயர்வடைந்துள்ளன. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உணவுக் கட்டமைப்பு மற்றும் விற்பனை ஆய்வுப் பிரிவின் பிரதானி நாலக்க விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். நிலவும் மழையுடனான வானிலை, பயிரிடப்படும் நிலத்தின் அளவு குறைவடைந்தமை மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கான தட்டுப்பாடு என்பன விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரையில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தையில், ஒரு கிலோகிராம் போஞ்சி, தக்காளி கறிமிளகாய் என்பனவற்றின் விலைகள் 400 முதல் 500 ரூபாய்கு இடைப்பட்ட அளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு! Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.