பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது
மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குறித்த பெண், கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரால் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த 28 ஆம் திகதி புளூமென்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண், மற்றுமொரு பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது
Reviewed by Author
on
November 06, 2021
Rating:
No comments:
Post a Comment