அண்மைய செய்திகள்

recent
-

நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் - பொதுச் சுகாதார பரிசோதகா்கள் சங்கம்

போயா தினங்கள் உட்பட நீண்ட வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை வருந்தத்தக்கது என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித் துள்ளது. நாட்டின் மக்கள் பல இடங்களுக்கு உல்லாசமாகப் பயணித்தனர் என்றும் மக்கள் எந்த வகையிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றும் சங்கத் தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

 இவ்வாறான முறையில் செயற்பட்டால் நாடு தொடர்ந்து ஆபத்தில் இருப்பதாகவும், நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார். நாடு மீண்டும் விரைவில் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என அவர் மேலும் வலியுறுத்தினார்

.
நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் - பொதுச் சுகாதார பரிசோதகா்கள் சங்கம் Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.