வடிகான் வெட்டிக்கொண்டிருந்த போது மண் சரிந்தது: கிருலப்பனையில் இளைஞர் உயிரிழப்பு
இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வடிகான் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டியை சேர்ந்த 19 வயதான இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வடிகான் வெட்டிக்கொண்டிருந்த போது மண் சரிந்தது: கிருலப்பனையில் இளைஞர் உயிரிழப்பு
Reviewed by Author
on
November 12, 2021
Rating:
No comments:
Post a Comment