அண்மைய செய்திகள்

recent
-

தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த விமானப்பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரோன்

தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த பயணிகளில் 13 பேர் ஒமிகிரோன் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவிலிருந்து வந்த 60 பயணிகளை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்களில் 13 பேர் ஒமிகிரோனினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது . நெதர்லாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலேயே இந்த விபரம் வெளியாகியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்ட 13 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள நெதர்லாந்தின் பொதுசுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என்பதால் மேலும் பலர் கண்டுபிடிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து வந்தவர்களை உடனடியாக மருத்துவபரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நெதர்லாந்தின் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பிட்ட வகை வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் நெதர்லாந்தில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மேலும் ஏழு தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து நெதர்லாந்திற்கு வந்தவர்களை தொடர்புகொள்ளுவதற்கான முயற்சிகளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த விமானப்பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரோன் Reviewed by Author on November 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.