அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குரு பூஜை.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,சிவனருள் இல்லம் நடாத்திய ஆறுமுக நாவலர் குரு பூஜை நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்லத்தில் இடம்பெற்றது. -சிவனருள் இல்லத்தின் பணிப்பாளர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டார். -

இதன் போது நந்திக் கொடி ஏற்றப்பட்டு ஆறுமுக நாவலர் குருபூஜை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதோடு ஆறுமுகநாவலருக்கு விசேட பூஜை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. -குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஆ.ஜீவிதா,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவசிறி கருணானந்தக் குருக்கள் உட்பட மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
               



















மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குரு பூஜை. Reviewed by Author on November 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.